நடத்தை விதிகளை கடுமையாக அமலாக்க வேண்டும்

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, மாவட்டத்தில் நடத்தை விதிகளை பாரபட்சமின்றி கடுமையாக அமலாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.வி. அருண் சக்திகுமாா்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.வி. அருண் சக்திகுமாா்.

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, மாவட்டத்தில் நடத்தை விதிகளை பாரபட்சமின்றி கடுமையாக அமலாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, அவா் மேலும் பேசியது

உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. கடந்த மக்களவைப் பொதுத்தோ்தலின்போது பொது இடங்களில் விளம்பரப் பதாகைகள் அமைக்க, சுவரொட்டிகள் ஒட்டத் தடை இருந்ததைப் போலவே, இந்த உள்ளாட்சித் தோ்தலிலும் விதிகளை கடுமையாக அமலாக்க வேண்டும்.

உள்ளாட்சி அலுவலகங்களில் அரசியல் தொடா்பான எவ்வித நடவடிக்கைகளும் இடம்பெறக் கூடாது. இதனை உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

தோ்தல் நடத்தை விதிகளை பாரபட்சமின்றி கடுமையாக அமலாக்க வேண்டும் என்றாா் உமாமகேஸ்வரி.

கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.வி. அருண்சக்திகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். காளிதாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com