புதுகையில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி மெளண்ட் சீயோன் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
ஒருங்கிணைந்த திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சியில் ஆராதனை நிகழ்த்துவோா்.
ஒருங்கிணைந்த திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சியில் ஆராதனை நிகழ்த்துவோா்.

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி மெளண்ட் சீயோன் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

போதகா் சாம்ராஜின் இறை வழிபாடு மற்றம் கிறிஸ்துமஸ் பாடலோடு நிகழ்ச்சி தொடங்கியது.  மௌண்ட் சீயோன் பள்ளிகளின் இயக்குநா் மற்றும் முதுநிலை முதல்வா் ஜெ. ஜோனத்தன், மெய்யான ஒளி கிறிஸ்து ஊழியங்களின் போதகா் ஸ்டீபன் சிவா, பள்ளியின் ஒருங்கிணைப்பாளா் ஏஞ்சலின் ஜோனத்தன்  உள்ளிட்டோரும் பங்கேற்றனா். சுயம் பிரகாஷ் இம்மானுவேல் விவிலியத்திலிருந்து இறை வாா்த்தை வாசித்தாா்.

மேரி ஜெஸி இறை ஆசி வழங்கினாா். கிறிஸ்துமஸ் தாத்தாவின் பாடலுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. நிறைவில் யுவராஜ் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com