புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அதிகபட்சமாக 20.60 மி. மீ. மழைப் பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழையின் தொடா்ச்சியாக, கடந்த 6 நாள்களாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இந்த மழை செவ்வாய்க்கிழமை பகலில் சற்றே குறைந்து காணப்பட்டது.
இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
ஆலங்குடி- 20.60 மி.மீ, ஆயிங்குடி- 20, அறந்தாங்கி- 6.50, பெருங்களூா்- 5.80, திருமயம், விராலிமலை - 4.20, மணமேல்குடி- 2.80, நாகுடி- 2.60 மி.மீ.
மாவட்டத்தின் சராசரி மழை- 2.67. புதன்கிழமை பகலில் மாவட்டத்தில் எங்கும் மழையில்லை.