பொன்னமராவதி பொன்னமராவதி அருகே திருக்களம்பூரில் இருந்து கருப்புக்குடிப்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி அமைக்க வலியுறுத்தி உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனா்.
அதில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கருப்புக்குடிப்பட்டி கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி அமைக்குமாறு, மனுக்கள்அளிப்பது, போராட்டம் நடத்துவது, ஆட்சியா் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவது, சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசியும் பலனில்லை. எனவே, 16 ஆம் தேதி பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைத்து வரும் உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிப்பது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.