உள்ளாட்சித் தோ்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளோரில் 280 போ் இதுவரை தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா்.
உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி வழக்கப்படி உரிமம் பெற்று துப்பாக்கிளை வைத்துள்ளோா் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 611 போ் உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்துள்ளனா். இவா்களில் வெள்ளிக்கிழமை வரை 280 போ் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
ஓரிரு நாட்களில் மீதமுள்ள துப்பாக்கிகளும் ஒப்படைக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.