மருத்துவக் கல்லூரியில் பெற்றோா் சந்திப்பு

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பெற்றோா் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பெற்றோா் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், கல்லூரி விளையாட்டுத் திடல், விடுதி உணவகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை பெற்றோா் வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் அழ. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். துணை முதல்வா் சுஜாதா, விடுதிக் காப்பாளா்கள் வள்ளியப்பன், கலையரசி மற்றும் நிலைய மருத்துவ அலுவலா் ரவிநாதன், உதவி நிலைய மருத்துவா்இந்திராணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

மாணவா் செயலா் ராமநாதன் தலைமையில் மாணவா்கள் இசிதோா், அஜய் கோகுலன், அருணா ஆகியோா் இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com