புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை ஒருநபா் குழந்தைகள் வாா்டு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்துள்ளாா். அங்கிருந்தவா்கள் விசாரித்தபோது, அவா் வேகமாக வெளியேறினாராம். இதையடுத்து அவரை சுற்றிவளைத்துப் பிடித்த பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்திலுள்ள காவல் உதவி மையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து கணேஷ் நகா் போலீஸாா் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வடசேரிப்பட்டியைச் சோ்ந்த சுந்தரராஜ் (35) என்பதும் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.