இரட்டை கொலை வழக்கில் 9 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் 9 பேரைப் போலீஸார் கைது செய்து திங்கள்கிழமை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் 9 பேரைப் போலீஸார் கைது செய்து திங்கள்கிழமை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே காரப்பட்டுவைச் சேர்ந்த வீராச்சாமி, அவரது மகன் முத்துவேல் ஆகிய இருவர் கடந்த சில நாட்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் மூர்த்தி உள்ளிட்ட 18 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய மூர்த்தி, முத்துகுமார், அனில், அய்யாச்சாமி, சரவணன், மதி, வினோத், செல்வம், செல்லமுத்து ஆகிய 9 பேரை கைது செய்து கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திங்கள்கிழமை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
மேலும் பலரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com