தமிழக அரசின் மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் பெற விரும்புவோர் விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் கா. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பணிக்குச் செல்லும் பெண்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், மானியத்துடன் இருசக்கரவாகனம் வழங்கும் திட்டத்தை மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். முதல்கட்ட இருசக்கர வாகனம் வழங்கும் பணி கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, நிகழாண்டுக்கான விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை பெறப்படுகிறது. எனவே வேலைக்குச் செல்லும் பெண்கள் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.