புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்சியில் திமுக வடக்கு மாவட்டச் செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பெரியண்ணன் அரசு தலைமை வகித்துப் பேசினார். நிகழ்ச்சியில் திமுக இலக்கிய அணி அமைப்பாளர் மணிமொழி மனோகரன். இளைஞரணித் துணை அமைப்பாளர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.