வரும் ஜன. 16, 21 மற்றும் 26 ஆகிய மூன்று தேதிகளிலும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்களும் மற்றும் உணவகங்களிலுள்ள அனுமதிபெற்ற மது அருந்தகங்களும் மூடியிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் அறிவித்துள்ளார்.
ஜன. 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம், ஜன. 21ஆம் தேதி வள்ளலார் நினைவு நாள் மற்றும் ஜன. 26ஆம் தேதி நாட்டின் குடியரசு தின விழா ஆகியவற்றையொட்டி இந்த மூடல் அறிவிக்கப்பட்டுள்ளது.