விராலிமலை அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் விராலிமலை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ரவி மகன் ராஜசேகர்(26), இவரது உறவினரான இலுப்பூர் அருகேயுள்ள எருதுபட்டியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் வீராச்சாமி ஆகியோர்
பைக்கில் விராலிமலையிலிருந்து எருதுபட்டிக்கு சென்றனர்.
விராலிமலை அருகேயுள்ள கொடிக்கால்பட்டி அருகே சென்றபோது நிலைதடுமாறிய பைக் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்த விராலிமலை போலீஸார் சடலங்களைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.