மடிக்கணினி வழங்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினியை உடனடியாக வழங்கக் கோரி, கந்தர்வகோட்டையில்  புதன்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினியை உடனடியாக வழங்கக் கோரி, கந்தர்வகோட்டையில்  புதன்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் க. தினேஷ்குமார் தலைமை வகித்தார்.
மாநிலத் தலைவர் ம . திருமேனிநாதன் , மாவட்டத்தலைவர் 
த . பாலமுருகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, 2017-18 ஆம் ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு மடிக்கணினியை உடனடியாக வழங்க வேண்டும்.  இத்திட்டத்தை முடக்கக்கூடாது என வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com