பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினியை உடனடியாக வழங்கக் கோரி, கந்தர்வகோட்டையில் புதன்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் க. தினேஷ்குமார் தலைமை வகித்தார்.
மாநிலத் தலைவர் ம . திருமேனிநாதன் , மாவட்டத்தலைவர்
த . பாலமுருகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, 2017-18 ஆம் ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு மடிக்கணினியை உடனடியாக வழங்க வேண்டும். இத்திட்டத்தை முடக்கக்கூடாது என வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.