ஆலங்குடி அருகே காயங்களுடன் முதியவர் சடலம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காயங்களுடன் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காயங்களுடன் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலங்குடி அருகேயுள்ள காத்தான்விடுதியைச் சேர்ந்தவர் சின்னையா(70), விவசாயி. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்ற அவர், வீடு திரும்பவில்லையாம். இதனால், அவரது உறவினர்கள் தேடியபோது, அப்பகுதியில் உள்ள அவரது வாழைத்தோட்டத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com