ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை செவ்வாய்க்கிழமை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணாவல்குடியில் உள்ள ஆண்டிகுளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் போலீஸார் நேரில் சென்று சடலத்தை மீட்டனர். மேலும், இறந்தவரின் அடையாளம், முகவரி, இறப்பின் காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.