மழை வேண்டி பிரகதம்பாள் கோயிலில் யாகம்
By DIN | Published On : 23rd June 2019 04:18 AM | Last Updated : 23rd June 2019 04:18 AM | அ+அ அ- |

புதுக்கோ ட்டை திருக்கோகர்ணத்திலுள்ள அருள்மிகு பிரகதம்பாள் கோயிலில் மழை வேண்டி வருண யாகம் மற்றும் வருண பர்ஜனய் சாந்தி யாகம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் முன்னிலையில் இந்த யாகம் நடத்தப்பட்டது. இதில், கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் பா. ஆறுமுகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா. சின்னதம்பி, ஆவின் பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பழனியாண்டி, மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் பாஸ்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.