புதுக்கோட்டையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 7 ஆண்டு சிறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி மாவட்ட மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெம்மக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சபாபதி மகன் மணி (49). இவர் கடந்த 2017 மார்ச் 11-ல் அதே பகுதியைச் சேர்ந்த இரு 6 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீஸில் புகார்அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஆலங்குடி போலீஸார்  வழக்குப் பதிவு செய்து மணியைக் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டமகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் நிறைவில் நீதிபதி எஸ். இளங்கோ குற்றவாளி மணிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து  வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com