புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ''டெக்குயிஸ்ட்-19'' தொழில்நுட்பக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயபாரதன் செல்லையா தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தொடக்கவுரையாற்றினார்.
கல்லூரி இயக்குநர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், கல்லூரி முதல்வர் பாலமுருகன், கல்வி ஒருங்கிணைப்பாளர் விவியன் ஜெய்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
டிசிஎஸ் நிறுவனத்தின் தரவு விஞ்ஞானி லெக்ஷ்மிகாந்த் ராஜாமணி சிறப்புரையாற்றினார். கணினித் துறைத் தலைவி பேராசிரியர் இளவரசி நன்றி கூறினார்.