பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியை ஈஸ்வரி தொடங்கிவைத்தார். பள்ளியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியே வந்து பள்ளியில் நிறைவுற்றது.
பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் 5 வயது முடித்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கவும், அரசு பள்ளிகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் குறித்தும் விளக்கும் பதாகைகள் ஏந்தியும் , முழக்கமிட்டு சென்றனர்.
பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் பங்கேற்றனர்.