மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி

பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியை ஈஸ்வரி தொடங்கிவைத்தார். பள்ளியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியே வந்து பள்ளியில் நிறைவுற்றது. 
பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் 5 வயது முடித்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கவும், அரசு பள்ளிகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் குறித்தும் விளக்கும் பதாகைகள் ஏந்தியும் , முழக்கமிட்டு சென்றனர். 
பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com