புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஏடிஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் ஏ. தர்மராஜ்பிரபு தலைமை வகித்தார். துணைத் தாளாளர் த. ராமாமிர்தம், முதல்வர் வி. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த ஒருங்கிணைப்பாளர் ச. தீபிகா உலக தண்ணீர் தினத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.
தண்ணீரின் அத்தியாவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நாடகங்கள் நடத்தப்பட்டன. முன்னதாக வி. விஜயராணி வரவேற்றார். முடிவில் த. சரவணகுமார் நன்றி கூறினார்.