ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்பழுதைச் சரிசெய்ய முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்பழுதைச் சரிசெய்ய முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகேயுள்ள நம்பன்பட்டியைச் சேர்ந்தவர் என். தமிழரசன் (40). ஆலங்குடி மின்வாரிய அலுவலகத்தில் மின் பணியாளராக பணிபுரிந்து வந்த இவர், ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை வெள்ளிக்கிழமை சரி செய்துகொண்டிருந்ததார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட தமிழரசன், மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  ஆலங்குடி போலீஸார் விசாரனை மேற்கொண்டுவருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com