பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னைக் கண்மாயில் கொன்னைப்பட்டி ஊரார்கள், இளைஞர்கள் சார்பில் மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .
கொன்னையூர் முத்துமாரியம்மன் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெற வேண்டிய மஞ்சுவிரட்டு மக்களவை தேர்தலால் தேதி மாற்றப்பட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக கொன்னைப்பட்டியிலிருந்து ஊர்வலமாக கொன்னைக் கண்மாய் சென்று அங்கு சுப்பிரமணியர், மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சிவகங்கை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான காளைகள் கண்மாயின் பல்வேறு இடங்களில் அவிழ்த்து விடப்பட்டன. அக்காளைகளை இளைஞர்கள், மாடுபிடிவீரர்கள் அடக்கினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸார் செய்தனர்.