புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 4 குழந்தை திருமணத்தை புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்கள் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
விராலிமலை அருகே உள்ள ராஜகிரியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அன்னவாசல் அருகேயுள்ள வயலோகத்தைச் சேர்ந்த சரவணன் என்ற
27 வயது இளைஞருக்கும் வயலோகத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
தகவலறிந்த அலுவலர்கள் புதன்கிழமை போலீஸாரின் உதவியுடன் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது உறவினர்களுக்கு அறிவுரை வழங்கி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, சிறுமியை அதிகாரிகள் மீட்டு புதுக்கோட்டை குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்தனர்.
விராலிமலை அருகேயுள்ள கல்குடி ஊராட்சிக்குட்பட்ட கோயில்கட்டுபட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், திருச்சி மாவட்டம் தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த வீரவேல் என்ற 23 வயது இளைஞருக்கும் தாயனூர் விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது.
இதேபோல் விராலிமலை அருகே கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அழகர் பெருமாள் (30) என்பவருக்கும், அதே
கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் நடைபெற இருந்தது. இலுப்பூர் வட்டம் வெள்ளாஞ்சார் காலனியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணின் அத்தை மகனுக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்கள் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சிறுமிகளின் பெற்றோர், உறவினர்களுக்கு அறிவுரை வழங்கி திருமணங்களைத் தடுத்து நிறுத்தினர்.