இலுப்பூர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
By DIN | Published On : 18th May 2019 09:17 AM | Last Updated : 18th May 2019 09:17 AM | அ+அ அ- |

இலுப்பூர் அலர்மேல்மங்கை சமேத கல்யாண வெங்கடேசபெருமாள் கோயில் வைகாசி திருவிழாவில் திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த இந்தக் கோயில் வைகாசி திருவிழா கடந்த மே 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மாலைகளில் உத்ஸவ மூர்த்தி சிறப்பு அலங்கார பல்லக்கில் ராஜ வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து வியாழக்கிழமை இரவு வெங்கடேசப்பெருமாள், அலர்மேல்மங்கைத் தாயாருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை (மே 18) நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை விழா குழுவினர், மண்டகப்படிதாரர்கள், ஊர் பொதுமக்கள் செய்கின்றனர்.