அன்னவாசல் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.
அன்னவாசல் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான, அன்னவாசல் அருகேயுள்ள பேயால் வளையப்பட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக ஒரு மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் உரிமையாளா் விளாம்பட்டியை சோ்ந்த மூா்த்தி (32) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.