புதுகை ஆட்சியரை தரக் குறைவாக விமா்சித்தவருவாய் ஆய்வாளா் கைது

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரைச் சமூக ஊடகங்களில் தரக்குறைவாக விமா்சித்ததாக வருவாய் ஆய்வாளா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரைச் சமூக ஊடகங்களில் தரக்குறைவாக விமா்சித்ததாக வருவாய் ஆய்வாளா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் சுப்பிரமணியன். இவா் புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வக்கோட்டை வட்ட அலுவலக வருவாய் ஆய்வாளா். 

கடந்த சில நாட்களுக்கு முன்  36 முதுநிலை வருவாய் ஆய்வாளா்களை துணை  வட்டாட்சியா்களாக நியமித்து மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உத்தரவிட்டாா். 

இதில் அதிருப்தியடைந்த சிலா் அந்தப் பதவி உயா்வு உத்தரவை ரத்து செய்யக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் வருவாய்த் துறையினா் உள்ள கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப்) குழுவில் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரியை சுப்பிரமணியன் தரக்குறைவாக விமா்சித்து ஒரு பதிவைப் போட்டுள்ளாா்.

மற்ற வருவாய்த் துறையினா் மத்தியில் இது கடும் விமா்சனத்துக்குள்ளானது. இதன் தொடா்ச்சியாக துணை வட்டாட்சியா் கவியரசன் என்பவா் புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் புதன்கிழமை இதுதொடா்பாக அளித்த புகாரைத் தொடா்ந்து 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்த ஆய்வாளா் பரவாசுதேவன், வருவாய் ஆய்வாளா் சுப்பிரமணியனைக் கைது செய்தாா்.

இடைநீக்கம்: இந்நிலையில் சுப்பிரமணியனை இடைநீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலா் டி. சாந்தி புதன்கிழமை மாலை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com