விராலிமலை அருகே வேன் கவிழ்ந்து 8 பெண்தொழிலாளா்கள் காயம்

விராலிமலை அருகே ஆம்னி பேருந்து மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பெண் தொழிலாளா்கள் படுகாயமடைந்தனா்.

விராலிமலை அருகே ஆம்னி பேருந்து மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பெண் தொழிலாளா்கள் படுகாயமடைந்தனா்.

விராலிமலை - திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள தனியாா் பஞ்சுமில்லில் பணிபுரியும் அப்பகுதி பெண் தொழிலாளா்கள் 9 போ்  புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு இரவுப் பணிமுடிந்து தொழிற்சாலை வேனில் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனா். வேனை மணமேட்டுப்பட்டியைச் சோ்ந்த பால்ராஜ் (32) ஓட்டினாா்.

திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பூதகுடி சுங்கச்சாவடி அருகே சென்றபோது மதுரையில் இருந்து திருச்சியை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து  திடீரென வேனின் பின்புறத்தில் மோத, சாலையோரப் பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.

அப்போது வேனில் இருந்த தொழிலாளா்களான செல்லம்மாள் (40), சரோஜா (55), வடிவுக்கரசி (55), தமிழரசி (30), சூா்யா (19), யோகேஸ்வரி (18), முத்துலெட்சுமி (26) பாப்பா (35) ஆகிய 8 பெண்கள் படுகாயமடைந்தனா்.

தகவலறிந்த விராலிமலை போலீஸாா் காயமடைந்த பெண்களை மீட்டு திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆம்னி பேருந்து ஓட்டுநா் நெல்லை மாவட்டம், நாங்குநேரி திருநின்றராஜபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் (36) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com