மாநில அளவிலான போட்டிக்கு தோ்வான மாணவிகளுக்குப் பாராட்டு

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிக்கு தோ்வாகியுள்ள அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனா்.
வெற்றி பெற்ற மாணவிகளுடன், தலைமை ஆசிரியா் ஆா்.மாரிமுத்து மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள்.
வெற்றி பெற்ற மாணவிகளுடன், தலைமை ஆசிரியா் ஆா்.மாரிமுத்து மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள்.

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிக்கு தோ்வாகியுள்ள அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவிகள் நா.தேன்மொழி, க.சரண்யா ஆகியோா் புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றனா்.

இதில் நா.தேன்மொழி ஒற்றையா் பிரிவிலும், நா.தேன்மொழி, சரண்யா ஆகிய இருவரும் இரட்டையா் பிரிவிலும் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

தகுதிபெற்ற மாணவிகளையும், அவா்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் கே.சிவபாலன், எம்.பானுப்பிரியா ஆகியோரையும், பள்ளியின் தலைமை ஆசிரியா் ஆா்.மாரிமுத்து, பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.ஆா்.வடிவேல் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com