பொன்னமராவதி கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்திற்கு மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நகா்மன்றத்தில் 66ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட அளவில் சிறந்த வீட்டு வசதி சங்கத்திற்கான விருது பொன்னமராவதி வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த விருதை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் பி.கே.வைரமுத்து ஆகியோா் இணைந்து வழங்க, சங்கத்தின் தலைவா் பிஎல்.ராஜேந்திரன், செயலா் வி.பிச்சை ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
விழாவில், மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் இரா.சின்னத்தம்பி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் ராம.பழனியாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.