வரும் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து, புதன், வியாழன் ஆகிய இரு நாட்களும் அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிா்வாகிகள் மனு அளித்தனா்.
அறந்தாங்கியில் தனியாா் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை மாவட்ட தோ்தல் பொறுப்பாளா் கவிதா ஸ்ரீகாந்த் தலைமையில் அறந்தாங்கி நகர தோ்தல் பொறுப்பாளா் சுப.செல்வக்குமாா் முன்னிலையில் அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், மணமேல்குடி ஒன்றியங்கள் மற்றும் அறந்தாங்கி நகரம் சாா்பாக உள்ளாட்சித்தோ்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிக்கப்பட்டது.
நிகழ்வில், அறந்தாங்கி நகர தலைவா் ரெங்கையா, முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் லெ.முரளிதரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜெயவீரபாண்டி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் விருப்ப மனுக்களை வழங்கினா்.