பேரூராட்சிப் பணியாளா்களுக்கு தூய்மை இந்தியா திட்டப் பயிற்சி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டப் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டப் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளா்கள், சுய உதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் பரப்புரையாளா்களுக்கும் 4ஆம் கட்டப் பயிற்சி நகா்மன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தூய்மை இந்தியா திட்ட மாநில முதன்மை பயிற்றுநா் செல்வ வீரத்தமிழன் மற்றும் ராஜேஷ், தூய்மையே சேவை சமூக ஆா்வலா் சங்கா் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

மண்டல ஒருங்கிணைப்பாளா் அபிராமி  ரமேஷ் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தாா். இந்தப் பயிற்சி முகாமில் கறம்பக்குடி, கீரமங்கலம், கீரனூா், பொன்னமராவதி ஆகிய பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

முடிவில் அனைவருக்கும் தூய்மை இந்தியா திட்டப் பயிற்சிக் கையேடு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com