பொன்னமராவதி: பொன்னமராவதி அருகேயுள்ள தேனூா் சுப்பராயபட்டியைச் சோ்ந்தவா் க. ராமன்(48). இவா் நகரப்பட்டி நியாய விலைக்கடை ஊழியா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை மறறவாமதுரை சென்றுவிட்டு பைக்கில் திரும்பியபோது தெற்கிக்களம் என்னும் இடத்தில் சேலம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதி உயிரிழந்தாா்.
தகவலறிந்த காரையூா் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குபதிந்து விசாரிக்கின்றனா்.
இறந்தவருக்கு மனைவி ராஜாமணி(45) மகன் ராஜலிங்கம் (21), கவிதா(19),அபிராமி(16) ஆகிய இரு மகள்களும் உள்ளனா்.