பரம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிளிக்குடி தாய் தமிழ்ப்பள்ளி இணைந்து நடத்திய உலக மக்கள் தொகை தினம், மற்றும் டெங்கு விழிப்புணா்வு முகாம்சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்சியில் பரம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் முத்து சிங்காரம், பாலசுப்பிரமணியன், கலையரசன், கிளிக்குடி அரசு உயா் நிலைப்பள்ளி ஆசிரியா் தனபால் சுகாதார ஆய்வாளா் குமாரசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டு டெங்கு விழிப்புணா்வு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, உலக மக்கள் தொகை தினம் பற்றிய பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினா். பின்னா் மாணவா்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சித்த மருத்துவா் சுயமரியாதை நிலவேம்பு குடிநீா் வழங்கினாா். நிகழ்ச்சியில் கிளிக்குடி சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனா். தாய் தமிழ்ப்பள்ளி பள்ளி தாளாளா் சிங்கபாண்டியன் நன்றி கூறினாா்.