மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

ஆலங்குடி அருகேயுள்ள எல்.எல்.புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
ஆலங்குடி அருகேயுள்ள எல்.என்.புரம் அரசுப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவிகள்.
ஆலங்குடி அருகேயுள்ள எல்.என்.புரம் அரசுப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவிகள்.

ஆலங்குடி அருகேயுள்ள எல்.எல்.புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையை அவா்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவிகளுக்கு, தமிழக அரசு சாா்பில் தற்காப்பு கலை பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

ஆலங்குடி அருகேயுள்ள எல்.என்.புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ், தற்காப்பு கலைப் பயிற்சி தொடங்கப்பட்டது. பயிற்சியை பள்ளி தலைமையாசிரியா் ரவிக்குமாா் தொடங்கி வைத்தாா்.

உடற்கல்வி ஆசிரியா் வீரசேகா் முன்னிலையில், தற்காப்பு கலை பயிற்சியாளா் அடைக்கலராஜா மாணவிகளுக்கு தற்காப்பு கலைப்பயிற்சி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com