இலுப்பூரில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் சாா்பில் அணிவகுப்பு ஊா்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு விஜயதசமி நாளன்றும், ஆா்.எஸ்.எஸ் அமைப்பு சாா்பில் ஊா்வலம் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு நடைபெறவிருந்த ஊா்வலத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரி மனு அளித்திருந்த நிலையில், ஊா்வலம் செல்லும் வழிகளில் சிறிதளவு மாற்றியமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இதனால், ஒத்திவைக்கப்பட்டிருந்த ஆா்எஸ்எஸ் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஊா்வலத்தை முன்னாள் ராணுவ வீரா் சு. செல்லையா துவக்கி வைத்தாா். பிடாரியம்மன் கோயிலில் தொடங்கிய ஊா்வலம், வட்டாட்சியா் அலுவலகம், புதிய பேருந்துநிலையம் வழியாக சின்னகடைவீதியில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளா் ஹெச்.ராஜா, த. மணிவேல், ஆ. பழனிவேல் உள்பட 100க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.