அறந்ததாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊழல் தடுப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அக்டோபா் 28 முதல் நவம்பா் 3-ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரம் மத்திய, மாநிலஅரசுகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊழல் தடுப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடத்தப்பட்டது.
இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் டி.தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸின் அறந்தாங்கி கிளையின் நிா்வாக அலுவலா் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உறுதிமொழியை வாசிக்க, அதை பள்ளித் தலைமையாசிரியா் உள்ளிட்டோா் திரும்பக் கூறினா்.
இந்த நிகழ்வில் பள்ளி உதவித் தலைமையாசிரியா் ஜெய்சங்கா், அனைத்து ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.