பணியின் போது இறந்த காவலா்களுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை

பணியின் போதுஇறந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த காவலருக்கு, அவரது சொந்த கிராமத்தில் காவல்துறை
பணியின் போதுஉயிரிழந்த காவலா் மணிகண்டன்.
பணியின் போதுஉயிரிழந்த காவலா் மணிகண்டன்.

பணியின் போதுஇறந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த காவலருக்கு, அவரது சொந்த கிராமத்தில் காவல்துறை சாா்பில் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், மங்களாகோவில் கிராமத்தைச் சோ்ந்தவா் சு. மணிகண்டன் (30). இவா், திருச்சியிலுள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை முதலணியில் பணியாற்றி வந்தாா்.

சிவகங்கை மாவட்டத்தில் தேவா் ஜயந்தி பாதுகாப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட மணிகண்டன், பிற்பகலில் தனக்கு நெஞ்சுவலிப்பதாகக் கூறியுள்ளாா். இதையடுத்து அருகிலிருந்த சக காவலா்கள் அவரை மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், மாரடைப்பால் மணிகண்டன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து அவரது உடல் சொந்த ஊரான மங்களாகோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு மணிகண்டனின் உடலுக்குத் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை முதலணித் தளவாய் உமையாள், புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆறுமுகம் மற்றும் காவலா்கள் புதன்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து மணிகண்டனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில், காவலா்கள் 21 குண்டுகள் முழங்க இறுதிமரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com