ஆலங்குடியில் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவரங்குளம் வட்டார சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், ஆலங்குடியில் நடைபெற்ற பேரணியை குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பவானி தொடக்கி வைத்தார். ஆலங்குடி சந்தைப்பேட்டையில் இருந்து தொடங்கிய பேரணியில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடிப் பணியாளர்கள் பங்கேற்றனர். இவர்கள் குழந்தைகள் ஊட்டச்சத்து, பேறுகாலப் பராமரிப்பு, சுகாதாரம், ரத்தசோகைத் தடுப்பு, முன்பருவக் கல்வி குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு வடகாடு முக்கம், அரசமரம் பேருந்து நிறுத்தம் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் பேரணியை நிறைவு செய்தனர்.