அன்னவாசல் அருகிலுள்ள முக்கண்ணாமலைப்பட்டியில், அம்மா திட்ட முகாம் மற்றும் மருத்துவமுகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், சுகாதார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து 15 மனுக்கள் பெறப்பட்டு அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நடமாடும் மருத்துவக்குழு மருத்துவர் முருகேசன், கண் பரிசோதகர் பரணி ஆகியோர் முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், கிராம சுகாதார செவிலியர் சுசிலா, வருவாய் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் முகாமில் பங்கேற்றனர்.