புதுக்கோட்டை நகரில் அதிகபட்சமாக 30 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை காலை வெயிலின் தாக்கம் வழக்கம் போல் இருந்த நிலையில், மாலை முதல் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழைத் தொடர்ந்து
பெய்தது.
புதுக்கோட்டை நகரைப் போன்று இலுப்பூர், காரையூர், அன்னவாசல், விராலிமலை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் ( மி.மீட்டரில்):
புதுக்கோட்டை- 30 மி.மீ, இலுப்பூர்- 19, காரையூர்-18, உடையாளிப்பட்டி,ஆதனக்கோட்டை- 6, விராலிமலை - 5.20, குடுமியான்மலை -5, அன்னவாசல்-4, கீரனூர்- 2.20, பெருங்களூர், கறம்பக்குடி- 2, திருமயம்- 1.60, கந்தர்வக்கோட்டை- 1 மி.மீ. மாவட்டத்தில் அதிகபட்சமாக 30 மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக கந்தர்வகோட்டையில் 1 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 4.08 மி.மீ.