அன்னவாசல் அருகே இளைஞர் சடலம் மீட்பு

அன்னவாசல் அருகே பாசிப்பட்டி பிரிவு சாலையில் இறந்துகிடந்த இளைஞர் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

அன்னவாசல் அருகே பாசிப்பட்டி பிரிவு சாலையில் இறந்துகிடந்த இளைஞர் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
அன்னவாசல் அருகிலுள்ள  பாசிப்பட்டி பிரிவு சாலையில், இளைஞர் ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக  108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்று பரிசோதித்த போது, அந்த இளைஞர் ஏற்கெனவே இறந்தது தெரிய வந்தது.
அவரது பாக்கெட்டில் அடையாள அட்டை இருந்ததை கொண்டு விசாரித்த போது, இறந்தவர்  புதுக்கோட்டை  மாவட்டம்,  திருவப்பூரைச் சேர்ந்த சண்முகம் மகன் பாபு(30) என்பதும், அவர் குளிர்பான ஏஜென்சி நடத்தி வந்ததும் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவரது உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அன்னவாசல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com