ஜெருசேலம் புனிதப் பயணம்: அரசு நிதியுதவி பெற அழைப்பு

புதுக்கோ ட்டையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசேலம் புனிதப் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.


புதுக்கோட்டை:  புதுக்கோ ட்டையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசேலம் புனிதப் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20ஆம் ஆண்டின் ஜெருசேலம் புனிதப் பயணம் மேற்கொள்ள ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. நிகழாண்டில் இத்திட்டத்தின் கீழ் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் உள்பட 600 பேர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இப் பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹம், ஜெருசேலம், நாசரேத், ஜோர்தான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மதத் தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனிதப் பயணம் செப். 2019 முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக் காலம் 10 நாட்கள் வரை. 

இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றிப் பெறலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்பத்தை இணையதள முகவரியில் பதிவிறக்கியும் பயன்படுத்தலாம். இதற்கான காலக்கெடு வரும் செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை "கிறிஸ்தவர்களின் ஜெருசேலம் புனித பயணத்துக்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம்  2019-20" என்று குறிப்பிட்டு, ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28520033.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com