காவிரி-குண்டாறு திட்டத்தை செயல்படுத்தக்கோரி இ.கம்யூ. பிரசாரம்

காவிரி-வைகை-குண்டாறு திட் டத்தை செயல்படுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.

காவிரி-வைகை-குண்டாறு திட் டத்தை செயல்படுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.
காவிரி - வைகை - குண்டாறு  இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக்கோரி, விவசாயிகள்  அரசுக்கு பல ஆண்டுகளாக  கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தேர்தல் நேர  வாக்குறுதியாக மட்டும் உள்ள இத்திட்டத்தை உடனே செயல்படுத்தக்கோரி,  செப்.27-ஆம்  தேதி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 
இதுகுறித்து,  பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தியகம்யூனிஸ்ட் கட்சியினர் அக்கட்சியின் ஒன்றியச்செயலர் ஆர். சொர்ணக்குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் நடைபெற்றது. கட்சயின் மாவட்டச்செயலர் மு.மாதவன் பிரசார பயணத்தை கீரமங்கலம் அருகேயுள்ள பனங்குளத்தில் இருந்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கீரமங்கலம், புளிச்சங்காடு கைகாட்டி, நெடுவாசல்,அணவயல், மாங்காடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
மறமடக்கியில்.... அறந்தாங்கி அருகே மறமடக்கியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்துக்கு கிளை நிர்வாகி மு.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் மு.மாதவன், மாவட்ட துணைச்செயலாளர் ஆ. ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகக் குழு சுந்தர்ராஜன், ஒன்றியச் செயலாளர்  முத்துச்சாமி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் ராஜமாணிக்கம், தங்கராஜ், கண்ணுச்சாமி, பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 
இதில், காவிரி- குண்டாறு- வைகை திட்டத்துக்கு நிதி ஒதுக்கி செயல்படுத்தக்கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை (செப்.27) புதுகை சின்னப்பா பூங்காவில் கட்சி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்பது என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com