புகையிலை பொருள்களை விற்ற 5 பேர் மீது வழக்கு

அன்னவாசல் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

அன்னவாசல் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
அன்னவாசல் பகுதியில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை  போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அன்னவாசல் பகுதி  கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில்  தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. 
இதனையடுத்து சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த சந்திரசேகர் (28), அபுதாஹீர்  (42), ரியாஸ் (32), பரக்கத்துல்லா (41), கலாடிப்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (28) ஆகிய 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com