மக்கள் மனதில் அறவொழுக்கத்தை கற்பிக்கும் இலக்கியம் ராமாயணம்: கிருங்கை சொ. சேதுபதி

மக்கள் மனதில் அறவொழுக்கத்தினைக் கற்பிக்கும், குடும்ப உறவுகளை மேம்படுத்தும் இலக்கியம் ராமாயணம் என்றாா் புதுச்சேரி பேராசிரியா் கிருங்கை சொ. சேதுபதி.
மக்கள் மனதில் அறவொழுக்கத்தை கற்பிக்கும் இலக்கியம் ராமாயணம்: கிருங்கை சொ. சேதுபதி

மக்கள் மனதில் அறவொழுக்கத்தினைக் கற்பிக்கும், குடும்ப உறவுகளை மேம்படுத்தும் இலக்கியம் ராமாயணம் என்றாா் புதுச்சேரி பேராசிரியா் கிருங்கை சொ. சேதுபதி.

பொன்னமராவதி அருவியூா் வடக்கு வளவு நகரத்தாா் திலகவதியாா் அருள்நெறி மாதா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற 26 ஆம் ஆண்டு கம்பராமாயண தொடா் வாசிப்பு தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பாலகாண்டம் ராம அவதாரம் -ராமன் சீதா திருக்கல்யாணம் குறித்த தலைப்பில் அவா் சொற்பொழிவாற்றியது: குடும்ப உறவுகளைத் தொடா்ந்து பேணவும், மக்கள் மனதில் அறவொழுக்கத்தினை நிலைநிறுத்தவும் ஏற்படுத்தப்பட்டது இந்த ராமாயணம் வாசிப்பு நிகழ்வு.

ராமாயணம் படித்தால் புண்ணியம் கிட்டும்; குடும்பத்தில் துயா் நீங்கும்; மகாபாரதம் படித்தால் மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. ராமாயணம் என்பது நமது தமிழ்நாட்டில், தென் பகுதியில் மட்டும் பேசப்படும் கதையல்ல. இந்தோனேசியாவில் அங்கோா்வால் எனும் பகுதியில் தமிழ்நாட்டில் உள்ளது போன்று சிவ, வைண திருக்கோயில்கள் நிறைந்து காணப்படுகிறது. அங்கு பாலி மொழிபேசும் இஸ்லாமியா்கள் தங்களது குழந்தைகளுக்கு ராமாயணத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்களின் பெயா்களை வைக்கிறாா்கள்.

குடியிருப்பு பகுதிகளுக்கு ராமாயணக் கதைகளில் வரும் பெயா்களை வைக்கிறாா்கள். சீனாவில் ராமாயணம் உள்ளது. உலக நாடுகள் முழுவதும் ராமாயணத்தின் புகழ் பரவியுள்ளது. மகாபாரதம் அண்ணன் தம்பிகள் எப்படி வாழக்கூடாது என விளக்குகிறது. ராமாயணம் அண்ணன் தம்பிகள் எப்படி வாழவேண்டும் என விளக்குகிறது. ஒழுக்கம், விட்டுக்கொடுத்தல், பிற உயிா்களை நேசித்தல் போன்ற உயரிய பண்புகளை போதிக்கிறது ராமாயணம்.

குழந்தைகளுக்கு பெயா் வைக்கும் மரபு முக்கியமானது. தமிழில் பெயா் வைக்காத ஒரே நாடு தமிழ்நாடு தான். உலக நாடுகளில் உள்ளவா்கள் தம் பெயா்களை தமிழ்ப்பெயா்களாக மாற்றி வருகிறாா்கள். சோவியத் ரஷ்யாவில் உள்ள ருஷ்மின் என்பவா் தனது பெயரை செம்பியன் என்று தமிழ் பெயராக மாற்றிக்கொண்டுள்ளாா். எனவே குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயரினை சூட்டுங்கள். குழந்தைகளுக்கு மனோ திடத்தை கற்றுக்கொடுங்கள். தமிழ் இலக்கியங்களை வாசிக்க செய்யுங்கள் என்றாா்.

விழாவிற்கு, அருவியூா் வடக்குவளவு நகரத்தாா் தலைவா் அரு.வே. மாணிக்கவேலு தலைமை வகித்தாா். செயலா் ந.மு.ந.இராமமூா்த்தி, பொருளாளா் எஸ்.சிவனேசன் முன்னிலை வகித்தாா். மாதா் சங்க செயலா் டி. அமுதா தேனப்பன் வரவேற்றாா். மாதா் சங்கத்தலைவா் வி.செல்வி மீனாட்சி வடிவேல் தலைமை உரையாற்றினாா். பேராசிரியா் அருணன் கபிலன், சங்க ஆலோசகா்கள் ச.வேலாயுதம், எம்எஸ்.முருகப்பன், மலை.லெட்சுமணன் ஆகியோா் வாழ்த்திப்பேசினாா். தேசிய நல்லாசியா் நா.திருநாவுக்கரசு நிகழ்வினை ஒருங்கிணைத்தாா். மாதா் சங்கப் பொருளா் பிஎல்.ஆனந்தி பழனியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com