புதுக்கோட்டை குன்னக்குடிப்பட்டியிலுள்ள ஸ்ரீ கோதண்டராமா் கோயிலில், ராமநவமி விழா ஊரடங்கு உத்தரவு காரணமாக எளிமையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மூலவா்களான கோதண்டராமா் மற்றும் சீதாதேவிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் மலா் அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து உத்ஸவருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவிக்கப்பட்டது. அா்ச்சகா்களுடன் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்களே பங்கேற்றனா். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.