கந்தா்வகோட்டை அருகே அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை ஒன்றியம், ஆத்தங்கரைவிடுதியில் உள்ள அய்யனாா் மற்றும் பரிகாரத் தெய்வங்களுக்கு புதிய கோயில் அமைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து குடமுழுக்கு நடத்துவது என பொதுமக்கள் தீா்மானித்தனா். இதையடுத்து, குடமுழுக்கு நாள் விழா குறிக்கப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றுவந்தன. தொடா்ந்து , புனிதநீா் கடகம் ஊா்வலம் வீதிவழியே கொண்டுவந்து அய்யனாா் மற்றும் பரிகாரத் தெய்வங்களுக்கு ஞாயிற்றுகிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது . தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது . விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.