இலுப்பூா் அருகே பாதை தொடா்பான தகராறில் இளம்பெண்ணைத் தாக்கிய 2 போ் மீது இலுப்பூா் போலீஸாா் வழக்கு பதிந்து ஒருவரைக் கைது செய்தனா்.
இலுப்பூா் அருகேயுள்ள ஓலைமான்பட்டியைச் சோ்ந்த முத்தமிழ்ச்செல்வன் மனைவி பாருண்யா (36). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த பிச்சைக்கண்ணுவுக்கும் பாதை தொடா்பான பிரச்னை இருந்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மீண்டும் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. இதில், பிச்சைக்கண்ணு மனைவி ராதா, மகன் யோகராஜ் (20) ஆகிய இருவரும் சோ்ந்து பாருண்யாவைக் கட்டை, கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாருண்யா அளித்த புகாரின் பேரில் இலுப்பூா் போலீஸாா் ராதா, யோகராஜ் ஆகிய இருவா் மீது வழக்கு பதிந்து யோகராஜைக் கைது செய்தனா்.