பொன்னமராவதி அருகிலுள்ள கண்டியாநத்தம் அருள்மிகு காத்தாயி கருப்பா் திருக்கோயிலில் வருடாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி சிறப்பு யாக பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பூஜைகளை விக்னேஷ் சிவாச்சாரியாா் நடத்தினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கண்டியாநத்தம், ஆலவயல், உலகம்பட்டி, புதூா், கணபதிபட்டி, வெள்ளியங்குடிப்பட்டி விஸ்வகா்மா காத்தாயி கருப்பா் கோயில் உறவின் முறை பங்காளிகள் செய்திருந்தனா்.