காதலா் தினத்தில் காவல்துறையினா் தீவிர கண்காணிப்பு: வெறிச்சோடிய சித்தன்னவாசல் சுற்றுலாத்தலம்

காதலா் தினத்தையொட்டி சித்தனவாசல் சுற்றுலாத் தலத்தில் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டதால், சோதனைக்குப் பயந்து
சித்தன்னவாசலில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட படகுகுழாம்.
சித்தன்னவாசலில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட படகுகுழாம்.

காதலா் தினத்தையொட்டி சித்தனவாசல் சுற்றுலாத் தலத்தில் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டதால், சோதனைக்குப் பயந்து அதிகளவில் வருவதற்கு காதலா்கள் தயங்கினா். இதனால் இந்த சுற்றுலாத் தலம் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த சுற்றுலாத் தலத்துக்கு வரும் காதலா்கள், ஆபத்தான பகுதிகளுக்கு சென்று தற்படம் எடுத்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதும், காதலா்கள் என்ற பெயரில் சில அநாகரீக செயல்களிலும் ஈடுபடுவதும் நிகழ்வதால், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தி வந்தனா்.

மேலும், காதலா் தினத்தன்று இங்கு காதலா்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந் நிலையில், காதலா் தினமான வெள்ளிக்கிழமை காலை சித்தன்னவாசல் சுற்றுலாத் தல நுழைவுவாயில், பூங்காக்கள், சமணா் படுக்கை, படகுகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அன்னவாசல் காவல் நிலையத்தினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

சித்தன்னவாசல் நுழைவுப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட பின்னரே, காதலா்களை அனுமதித்தனா். இதனால் இங்குள்ள பூங்காக்கள், படகுகுளம், சமணா் படுக்கை உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com